V Ramalingam Pillai
எங்கள் பதிப்பகத்தின் வெளியீடாக நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுப்பை ’தாயார் கொடுத்த தனம்’ என்ற தலைப்புடன் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம்.இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது.வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச் சிறப்பு.